பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சி.ஏ, தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சி.ஏ, தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்


   அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.ஏ., தேர்வுக்கான இலவச, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பட்டய கணக்காளர் என்ற, ஆடிட்டர் பதவிக்கான, சி.ஏ., தேர்வில் வெற்றி பெற, மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் வழி பயிற்சியை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

   இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் விபரங்களை, sircclasses@icai.in என்ற, இ - மெயில் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள், செப்டம்பர், 20 வரை நடக்கும். தினமும் காலை, 8:00 முதல், 11:15 மணி வரையிலும், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 8:15 வரையிலும், ஆன்லைனில்இந்த வகுப்புகள் நடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments