மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.25 வரை விண்ணப்பிக்கலாம்

     மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு செப். 25 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் அணைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியாற்ற அதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ("சி-டெட்') கண்டிப்பாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின் மூலம் இயங்கும் நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில்,  பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்த வருடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்வை மொத்தம் 20 மொழிகளில் எழுதலாம். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்த தேர்வு நடக்கவிருக்கிறது.

     முதலில் தேர்வு எழுதுவோர் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 18 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலக்கெடு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், தேர்வுக் கட்டணத்தை 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments