மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் திட்டிடுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தரவு ஆதாரமாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைக்கான அரசுத் திட்டங்களை வடிவமைப்புது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, இந்தியாவில் முதல் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (வீடுகள் பட்டியலிடுதல்) கடந்த ஏப். 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. தமிழகத்தில் முதல் கட்ட கணக்கெடுப்பான களப்பணிகள் ஆக. 1-ம் தேதி முதல் தொடங்கின.
📌 கணக்கெடுப்பு முக்கிய அம்சங்கள்:
👥 பணியாளர்கள் பங்களிப்பு
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 1.15 லட்சத்துக்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்களும் 19 ஆயிரத்துக்கும் அதிகமான மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
📝 சேகரிக்கப்பட்ட கேள்விகள்
கணக்கெடுப்பு பணியின்போது, கணக்கெடுப்பாளர்கள் 33 முக்கியக் கேள்விகளுக்கு பதில்களைச் சேகரித்தனர்.
💻 சுய கணக்கெடுப்பு தளம்
ஜூலை 17 முதல் 31-ம் தேதி வரை உருவாக்கப்பட்ட சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்துள்ளன.
📅 இரண்டாம் கட்டம்
1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி அனைத்துத் தனிநபர் பதில்களும் ரகசியமாக வைக்கப்படும். இரண்டாம் கட்டமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
📢 இயக்குநர் எம்.சுந்தரேஷ் பாபு அறிவிப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம்.சுந்தரேஷ் பாபு தெரிவிக்கையில், முதல் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாகவும், தொழில்நுட்ப தரவுகளை இணைக்கும் பணி ஒரு சில நாட்கள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இப்பணியை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவு செய்ய உறுதுணையாக இருந்த அனைத்து கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
0 Comments