இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ், மனுதாரரை B.T. Assistant ஆசிரியராக 14.09.2012 முதல் பணிநியமன அங்கீகாரம் பெற்றதன் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்கள் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கவும் அரசுக்கு/எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடும் வகையில் Mandamus (கட்டளையிடும் நீதிப்பேராணை) பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது.
மேலும், மனுதாரர் 16.11.2025 அன்று நடைபெற்ற TET Paper-II தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், இப்பலன்களை இம்மாண்புமிகு நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் வழங்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நீதிமன்ற ஆணை விவரங்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.
📌 வழக்கு மற்றும் ஆணை விவரங்கள்:
-
⚖️
வழக்கின் கோரிக்கை: B.T. Assistant ஆசிரியராக 14.09.2012 முதல் பணிநியமன அங்கீகாரம் பெற்று, TET தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் பணப்பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை வழங்குதல்.
-
📅
TET தேர்ச்சி விவரம்: மனுதாரர் 16.11.2025 அன்று நடைபெற்ற TET Paper-II தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
-
📜
நீதிமன்ற உத்தரவு: பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து உரிய பணப் பலன்கள் மற்றும் நிலுவைத் தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments