மக்கள் தொகை கனக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்களுக்கு விலக்களிக்க முடியாது - உயர் நீதிமன்றத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தகவல்!

Census Duty Exemption for Teachers High Court Case Details
High Court Legal Update

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்களுக்கு விலக்களிக்க முடியாது - உயர் நீதிமன்றத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தகவல்!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது குறித்த வழக்கு விசாரணை விவரங்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்களிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், "அவ்வாறு விலக்களிக்க முடியாது; சட்டப்படி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம்" என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தரப்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மணிவாசகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பொதுத் தேர்விற்கு கற்பித்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதால் பாடத்திட்டத்தை உரிய காலத்திற்குள் முடித்தல், தேர்வு நடத்துதல் மற்றும் அக மதிப்பீடுகளை மேற்கொள்ளுவதில் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

📌 வழக்கு விவரங்கள் & வாதங்கள்:

⚖️ சட்டப் பிரிவு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

👥 காரணங்கள்

அந்தந்தப் பகுதி மாணவர்களின் குடும்ப சூழல் மற்றும் பொருளாதார நிலையை ஆசிரியர்கள் அறிந்திருப்பதால் அவர்கள் பணியை எளிதில் கையாள முடியும் என வாதிடப்பட்டது.

🏛️ கலெக்டர்களின் அதிகாரம்

தேவை அடிப்படையில் பொருத்தமானதாக கருதப்படும் ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முடிவெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளது.

🗓️ வழக்கு ஒத்திவைப்பு

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சிலருக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கலெக்டர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து செப். 7-க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

📱 Download Tamilaruvi App for Teacher & Court Updates

Post a Comment

0 Comments