ஆசிரியர்களுக்கான சிறப்பு TET (Special TET) தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குக் கடந்த முறை விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை, 2026 ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
⚖️ நீதிமன்ற விசாரணை விவரங்கள்:
தற்போதைய நிலை
முடிவுகள் வெளியிடத் தடை
முக்கிய விவாதம்
கருணை மதிப்பெண் (Grace Marks)
அடுத்த விசாரணை
24 ஆகஸ்ட் 2026
📌 கருணை மதிப்பெண் & புதிய மனுக்கள்:
சிறப்பு TET தேர்வில் பங்கேற்றவர்களுக்குக் கருணை மதிப்பெண் (Grace Mark) வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அரசின் இக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே வேளையில், இந்த வழக்கில் வேறு சில தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனுக்களும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விசாரணை வழக்கம்போல் 2026 ஆகஸ்ட் 24 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ குறிப்பு: கருணை மதிப்பெண் (Grace Marks) வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தால் இதுவரை எந்தவொரு இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
0 Comments