மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் - அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள்!

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்

Teachers Census Duty Impact on Public Exam Students Tamil Nadu

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் பட்டமேற்படிப்பு ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், காலை மற்றும் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள், பள்ளி நேர வகுப்புகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

📊 கணக்கெடுப்புப் பணி விவரங்கள்:

📅

பணி தொடக்கம்

ஆகஸ்ட் 1 முதல்

🏠

பணியின் இலக்கு

ஒருவருக்கு 150 முதல் 250 வீடுகள்

📋

தகவல் சேகரிப்பு

34 வகையான சொத்து விவரங்கள்

வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி அந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான வீட்டுப் பட்டியல் மற்றும் பயிற்சி முகாம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. தற்பொழுது பொதுமக்கள் தங்களின் சுயவிவரங்களை ‘மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு’ மூலம் அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றாலும், அவற்றையும் நேரில் சென்று சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது.

🏫 சிறப்பு வகுப்புகள் பாதிப்பு

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களைக் கூடுதல் மதிப்பெண் எடுக்கவைக்கவும், கற்கும் திறன் குறைந்த மாணவர்களைத் தேர்ச்சிபெற வைக்கவும், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

காலை 8.30 - 9.00 மணி மற்றும் மாலை 4.30 - 5.30 மணி

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் இந்தக் கணக்கெடுப்புப் பணிக்குச் செல்ல உள்ளதால், இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வாய்ப்பில்லை. இது மாணவர்களின் பொதுத்தேர்வு தயாரிப்பைப் பெரிதும் பாதிக்கும்.

📢 ஆசிரியர்கள் & சங்கங்களின் கோரிக்கை

"மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது அவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையைத் தருவதோடு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, ஆசிரியர்களுக்குப் பதிலாகப் படித்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை இப்பணிகளுக்குப் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்."

Post a Comment

0 Comments