பொறியியல் மாணவர் சேர்க்கையில் (TNEA) பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் 35,214 மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தங்களது தற்காலிக ஒதுக்கீட்டை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📊 முதல் சுற்று கலந்தாய்வு விவரங்கள்:
தற்காலிக ஆணை பெற்றவர்கள்
35,214 மாணவர்கள்
பங்கேற்ற கட்-ஆஃப்
200 முதல் 171 வரை
உறுதி செய்வதற்கான கெடு
இன்று மாலை 5 மணிக்குள்
நடப்புக் கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற்றன. இக்கலந்தாய்வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான முதல்சுற்று ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் 200 முதல் 171 கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண் பெற்றவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தகுதியுள்ள அனைத்துத் தொழிற்கல்வி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
📢 மாணவர்களின் கவனத்திற்கு!
நேற்று காலை 10 மணி நிலவரப்படி 35,214 மாணவர்களுக்குத் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை (Final Allotment Order) ஆன்லைனில் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
0 Comments