ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவப்படி | இனி
நேரடியாக வங்கி கணக்குக்கு வந்துவிடும் - ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்
மத்திய அரசின் என்.பி.எஸ்., ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 'நிலையான
மருத்துவப்படி' இனி ரசீதுகள் இன்றி தானியங்கி முறையில் வழங்கப்படும். காலதாமதத்தை
தவிர்க்கவும், அலைச்சலை குறைக்கவும் மத்திய நிதி அமைச்சகம் இந்த நேரடி பண
பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதல் வசதி
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களின் 'நிலையான மருத்துவப்படி'யை ரத்து
செய்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் 'சி.ஜி.ஹெச்.எஸ்.,' மருத்துவ காப்பீட்டு
திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். ஒருமுறை இந்த திட்டத்தை தேர்வு செய்துவிட்டால்,
அதன் விதிகளே செல்லுபடியாகும்; அதன் பிறகு மாதாந்திர மருத்துவப்படி வழங்கப்படாது.
ஓய்வூதியதாரர்களுக்கு என்ன லாபம்?
ஆவணங்களை திரட்டுவதோ, அவற்றை சமர்ப்பிக்க அலுவலகங்களுக்கு அலைவதோ தேவையில்லை 3
மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்து சேரும்
மையப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு முறை என்பதால், பணம் விடுவிப்பதில் ஏற்படும்
குளறுபடிகள் மற்றும் கணக்கீட்டு பிழைகள் குறையும்.
முக்கிய மாற்றங்கள்
தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி
நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்செப்டம்பர் - நவம்பர் காலத்திற்கான
தொகை டிசம்பர் முதல் வாரத்திலும், டிசம்பர் - பிப்ரவரி காலத்திற்கான தொகை மார்ச்
முதல் வாரத்திலும் செலுத்தப்படும்மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம், தகுதியுள்ள
நபர்களை சரிபார்த்து வங்கிகளுக்கு தகவல் அனுப்பும்.
அதன் பிறகு வங்கிகள் தானாகவே பணத்தை செலுத்திவிடு ம்மருத்துவப்படி தடையின்றி
கிடைக்க வேண்டுமானால், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தங்களின்
'ஆயுள் சான்றிதழை' சமர்ப்பிக்க வேண்டும்சமர்ப்பிக்க தவறினால், டிசம்பர் மாதம்
முதல் மருத்துவப்படி நிறுத்தப்பட ு ம்ஓய்வூதியதாரரின் மறைவுக்கு பிறகு,
தகுதியுள்ள குடும்ப உறுப்பினர் (மனைவி/கணவர்) இதை பெறலாம்ஏற்கனவே அனுமதி
படிவத்தில் குடும்ப உறிப்பினர்களின் பெயர் இருந்தால், ஓய்வூதியதாரரின் இறப்பு
சான்றிதழை மட்டும் கொடுத்தால் போதும்பெயர் இல்லையெனில் புதிய அனுமதி பெற வேண்டும்
0 Comments