நாளை (24.01.2026) - பள்ளிகள் முழு வேலை நாளாக
அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தருமபுரி மாவட்டம்
பார்வையில் காண் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் வடகிழக்கு பருவ மழையின்
காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2310.2025 (வியாழக்கிழமை) அன்று உள்ளூர்
விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, அவ்விடுமுறையை ஈடுகட்டும் விதமாக பிறிதொரு
சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும் என
தெரிவிக்கப்பட்டது.
எனவே, அவ்விடுப்பை ஈடு செய்யும் வகையில் 24.01.2026, சனிக்கிழமை அன்று அனைத்து
வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் என சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும்
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி
(சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்
தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை)
முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி
(சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி
பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம்
(திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 7ம் தேதி புதன்கிழமை )
உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் பொருட்டு..நாளை 24.01.26 சனிக்கிழமை
பள்ளி முழு வேலை நாள்
Wednesday Time Table.🙏
0 Comments