பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி வெளியீடு

பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி வெளியீடு

பொதுத்தேர்வு எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பாடங்களுக்குமான வினா வங்கி வெளியிடப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேர்விற்கு எளிதில் தயாராகும் வகையில் வினாவங்கி புத்தகம், கணித பாடத்திற்கான தீர்வு புத்தகம் போன்றவை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினா வங்கியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments