இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளும் ரத்து - புதுச்சேரி பல்கலைக்கழகம்

   நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக , பல மாநிலங்களில் பள்ளிகளில் பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றது. இதனை தொடர்ந்து , கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.


       இந்நிலையில் , இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. பல்கலைக் கழகம் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து என்றும் , செய்முறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து என்ற அறிவிப்பு மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



Post a Comment

0 Comments