பள்ளிகளில் தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!

             பள்ளிகளில் தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!





      தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெற்றுவருகிறது . தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் பின்வருவாறு.  10 , 11 , மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துவதைப்போல, அனைத்து வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வினையும் , தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தனித்தனி அறைகளில் ( அறைக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் ) முழு கண்காணிப்புடனும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் நடத்தவேண்டும் .





     அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் .தேர்வுப்பணியில் இல்லாத ஆசிரியர்கள் , தேர்வு இல்லாத மாணவர்களை அடுத்த தேர்விற்கு தயார் செய்தல் வேண்டும் . தேர்வு அறைக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்கள் கைப்பேசி கொண்டு செல்லுதல் கூடாது . அவ்வாறு ஆசிரியர்கள் கைப்பேசியுடன் அறைக்கண்காணிப்பு பணியை மேற்கொள்வது கண்டறிப்பட்டால் அதற்கு தலைமையாசிரியரே முழு பொறுபேற்க வேண்டும் .





     வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளை பார்வையிட்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டு இவ்வலுவலகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.









Post a Comment

0 Comments