தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2027-ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அப்பணியை முழுமையாக முடித்திட செப்டம்பர் 5-ம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அளித்து, அப்பணியை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் விரைந்து முடித்திட அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
📌 முக்கிய அறிவிப்பு விவரங்கள்:
📍 மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.
🗓️ கால நீட்டிப்பு
முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை முடிக்க செப்டம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
🏫 தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
கணக்கெடுப்புப் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி, எந்தவிதப் புகாருமின்றி பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments