மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சிப் படி, தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம் :

Census Duty Date Extension Thanjavur District Collector Letter
Census 2027 Update

மக்கள்தொகை கணக்கெடுப்பு: பயிற்சிப் படி, தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்!

வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பயிற்சிப் படி மற்றும் மதிப்பூதியம் ரூ.10,200 வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிகாரிகளின் விளக்கம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்து இரண்டு வாரங்களாகியும், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குரிய பயிற்சிப் படியும் மதிப்பூதியமும் இதுவரை வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

சுமார் 1 லட்சம் பேருக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.102 கோடி மதிப்பிலான பயிற்சிப் படியும் மதிப்பூதியமும் நிலுவையில் உள்ள நிலையில், இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவு அதிகாரிகள் உரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

📌 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஊதிய நிலுவை முக்கிய விவரங்கள்:

💰 நிலுவையில் உள்ள தொகை

பயிற்சிப் படி மற்றும் மதிப்பூதியம் சேர்த்து ஒருவருக்கு ரூ.10,200 வீதம் சுமார் 1 லட்சம் பணியாளர்களுக்கு ரூ.102 கோடி வரை வழங்கப்படாமல் உள்ளது.

தாமதத்திற்கான காரணம்

மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிதி மாவட்ட ஆட்சியர்கள் வழியாக வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படவுள்ள நிலையில், பணியாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

📊 அடுத்த கட்டப் பணிகள்

வரும் அக்டோபரில் அடுத்தக்கட்டப் பயிற்சிகளும், நவம்பரில் மாவட்ட மக்கள்தொகை கையேடு தயாரிப்புப் பணியும் தொடங்கவுள்ளதாக மாநில இயக்குநர் எம். சுந்தரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

📱 Download Tamilaruvi App for Census & Government Updates

Post a Comment

0 Comments