தமிழகத்தில் 14 ஆயிரத்து 829 அரசு தொடக்கப் பள்ளிகளில், 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 349 அரசு தொடக்கப் பள்ளிகளில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 971 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். எனினும், ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருவதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்றி 246 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
📌 மாணவர் சேர்க்கை சரிவு குறித்த புள்ளிவிவரங்கள்:
📊 பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்
10 மாணவர்களுக்குக் கீழ் 3,027 பள்ளிகளும், 20 மாணவர்களுக்குக் கீழ் 6,635 பள்ளிகளும், 30 மாணவர்களுக்குக் கீழ் 5,167 பள்ளிகளும் என மொத்தம் 14,829 பள்ளிகள் உள்ளன.
⚠️ 60.90% பள்ளிகளில் குறைவான மாணவர்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் சுமார் 60.90 சதவீத பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவது கல்வித்துறை வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
🏫 அடிப்படை வசதிகள் குறைவு
பல அரசுப் பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை போன்ற வசதிகள் குறைவாக இருப்பதும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்வதற்குக் காரணமாக அமைகிறது.
👩🏫 ஆசிரியர் பற்றாக்குறை தாக்கம்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்த மாணவர் உள்ள பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதால் அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
0 Comments