மீண்டும் நாடு முழுக்க ஊரடங்கு அமல் இனி வீட்ல தான் தெரிவித்தது பூட்டான் அரசு

 இன்று முதல் ஏழு நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

      கொரோனா பரவலை தடுப்பதற்கான இந்தாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தின. ஆனால், ஊரடங்கால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்து, தொழில் பாதிக்கப்பட்டு பண நெருக்கடி ஏற்பட்டது. பல நாடுகளின் பொருளாதாரங்கள் சுக்குநூறாக நொறுங்கின.

  இதையடுத்து, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப அனைத்து நாடுகளும் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தின. எனினும், கொரோனா தலைதூக்கும் சில இடங்களில் அவ்வப்போது முழு ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

     இவ்வகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஏழு நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பூட்டான் அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் ஏழு நாட்களுக்கு இந்த நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

   இதுகுறித்து பூட்டான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்துவதால் நோய் பரவுவதை தடுக்க அரசுக்கு உதவியாக இருக்கும். மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதித்ததன் தொடர்ச்சியாக, நோய் பரவலை தடுக்க தேசிய கோவிட்-19 சிறப்பு படை கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தடையின்றி நடைபெறூம். எனினும், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவை ஏழு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். பூட்டானில் நேற்று வரை ஒட்டுமொத்தமாக 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 430 பேர் குணமடைந்துவிட்டனர்.

Post a Comment

0 Comments