தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் புத்தகங்கள் விநியோகிக்க அரசு அனுமதி வழங்க பெற்றோர்கள் கோரிக்கை

     தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் புத்தகங்கள் விநியோகிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொற்று வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் திறப்பு தேதியை இது வரை அரசு அறிவிக்க முடியாத சூழல் உள்ளது. எனினும் சில பள்ளிகள் ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளிலும், ஆசிரியர்கள் வேகமாக பாடம் எடுத்து செல்வதால் மாணவர்கள் எதுவும் புரியாத நிலையே உள்ளது.


      இதற்கிடையே தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில், கடந்த இரு நாட்களாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியர் வாங்கி வருகின்றனர். இதுபோல் தனியார் பள்ளிகளிலும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கட்டணம் செலுத்தி பாடப்புத்தங்கள் வாங்கப்பட்டு விட்டன. ஆனால், தனியார் பள்ளிகள் புத்தகங்களை மாணவர்களுன்கு வழங்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.


       தற்போது தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பாடப்புத்தகங்கள் கேட்டு படையெடுத்து வருகின்றனர். இதனால் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதை தடுக்க பல பள்ளிகள் தங்களது அலுவகத்தையே மூடி விட்டன. கொரோனா விடுமுறையில் வீட்டில் வைத்தே சில பெற்றோர்கள் பாடங்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்றனர். ஆனால், அவர்களிடம் புதிய பாடப்புத்தகங்கள் இல்லை. இலவச பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், கட்டணம் செலுத்தி வாங்கும் புத்தகங்களை விநியோகிக்க அனுமதி மறுப்பது ஏன்? எனவே மாணவ. மாணவியரின் நலன் கருதி உடனடியாக தனியார் பள்ளிகளிலும் பாடப் புத்தகங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments