நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்

     நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீத தொகையை 3 தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, இதுபோன்ற பேரிடர் காலங்களில் கல்வி கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைபடுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டுவர தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

   அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரிடர் மேலாண்மை சட்டபடி கொண்டுவரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தமிழக அரசு எந்தவித எண்ணையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

   அப்போது ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசின் மனு பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 70 சதவீத கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக  வசூலிக்கலாம் என தெரிவித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Post a Comment

0 Comments