தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை

தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை

''தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தியாவில், மூன்று லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.ஆனால், ௧௦ லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இதனால், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 20 வரை, ஆன்லைனில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வழக்கமாக அனைத்து பள்ளிகளும் ஜூனில் திறக்கப்படும். தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments