கொரொனா வைரஸ் தாக்குதல் இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

கொரொனா வைரஸ் தாக்குதல் இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!





 சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றம் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.



      இந்தியர்களுக்கு உதவுவதற்காக +86 1861 208 3629 மற்றும் +86 1861 208 3617 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த எண்களுக்கு கடந்த 2 நாட்களில் 600 க்கும் அதிகமான அழைப்புக்கள் வந்துள்ளது. அவசர எண்களின் தேவை அதிகரித்திருப்பதால் 3வது உதவி எண்ணாக +86 1861 095 2903 அறிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments