DA - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர்
அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக
உயர்த்தப்படும் என்று இன்றைய சுதந்திர கொடியேற்றத்தின் போது முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும்
அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடுமையான
நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து,
34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்" என்று முதல்வர் கூறினார்.
0 Comments