அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? -
அமைச்சர் பேட்டி
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த
கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்
அவர் அளித்த பேட்டி: 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது
குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட
பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக
உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு
பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments