தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம்

தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம்.

    தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனராக இருந்து வந்தார். தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த வெ.இறையன்பு?

    1996-2001 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலராக இருந்தவர் இறையன்பு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக திறம்பட செயல்பட்டவர்.‌ 2006ல் சுற்றுலா துறை செயலராக இருந்த போது சிங்கப்பூரில் ஏற்பட்ட கார் விபத்தில் கால் உடைந்ததால் ஒதுங்கி இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஒதுங்கி இருந்தார்.

     எழுத்தாளர் , கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் என இவர் பன்முகத் திறமைகளுடைய ஆளுமைக் கொண்டவர். இறையன்பு IAS மூன்று டாக்டரேட் (டி.லிட்) பட்டம் பெற்றவர். 153 புத்தகங்கள் எழுதியுள்ளார். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

Click here to Download
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    

Post a Comment

0 Comments