நாடு முழுவதும் போக்குவரத்துக்கு தடை மத்திய அரசு இன்று ஆலோசனை

நாடு முழுவதும் போக்குவரத்துக்கு தடை? மத்திய அரசு இன்று ஆலோசனை

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து இன்று பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
போக்குவரத்துக்கு தடை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் அதிகமாக பரவியது. மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று அனைத்து மாநில ஆளுநர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. அதில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments