தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

Source 

9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முடிவு குறித்து இங்கே காணலாம்.
ஹைலைட்ஸ்:
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இல்லை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு கோடை விடுமுறை விடப்படும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம், அதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு என ஓராண்டு காலம் ஓடிப் போனது. 

இந்த காலகட்டத்தில் பள்ளிமாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த படியே கல்வி கற்கும் சூழல் உருவானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் பிளாட்பார்ம் என புதிய சூழலை மாணவர்கள் சந்தித்தனர். 

இப்படியே பல மாதங்கள் ஓடிய நிலையில் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்ந்தது. இதிலிருந்து விடுபட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 40 முதல் 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. 

மேலும் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தல், மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவை பெரும்பாலும் பள்ளி வளாகங்களில் தான் நடத்தப்படும். 

இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இம்முறை கொரோனாவை கருத்தில் கொண்டு கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பெரும்பாலான பள்ளிகளில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விட வேண்டியுள்ளது. 

எஞ்சிய மாணவர்கள் இன்னும் வீட்டிலிருந்தே கல்வி கற்று வருகின்றனர். இந்த சூழலில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்பிறகு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த திட்டமிடப்படும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

முன்னதாக 10ஆம் வகுப்பிற்கு மட்டும் மதிப்பெண்களை கணக்கிட வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப மாவட்ட அளவில் பருவத் தேர்வை நடத்தி மதிப்பெண் பட்டியலை தயார் செய்ய முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். 
மற்ற வகுப்பினருக்கு முடிந்தவரை பாடத்திட்டங்களை நடத்தி முடித்தால் போதும். அதன்மூலம் அடுத்த கல்வியாண்டிற்கு தயாராக உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source;https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-school-education-department-plans-holiday-for-9-10-11th-students-from-april-1st-2021/articleshow/81516259.cms


Post a Comment

0 Comments