கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் 101 வயது பெண்ணுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

   கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் 101 வயது பெண்ணுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
    கொரோனாவுக்கு தடுப்பூசிகள் ரெடியாகிவிட்ட நிலையில் பல்வேறு நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளன. மற்ற நாடுகளும் தடுப்பூசி போடும் பணிக்காக ஆயத்தமாகி வருகின்றன. உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போட அனுமதியளிக்கப்பட்டது.

  தடுப்பூசி போடுவதில் பொதுவாக அனைத்து நாடுகளுமே வயது முதிர்ந்தோர், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனியிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

  இதை தொடங்கும் வகையில் நேற்று ஜெர்மனியில் எடித் குவாய்சல்லா என்ற 101 வயது முதிய பெண்ணுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. ஜெர்மனியின் கிழக்கு மாகாணமான சக்ஸோனி-அன்ஹால்டில் உள்ள காப்பகத்தில் 40 பேருக்கும் 10 ஊழியரளுக்கும் ஃபைசர் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.

 இதுகுறித்து ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இது நம்பிக்கையை உருவாக்கும் நாள். கொரோனா கொள்ளை நோயை வெற்றிகொள்ள முக்கிய கருவிதான் தடுப்பூசி. நமது வாழ்வுக்கு நாம் திரும்ப அனுமதிக்கும் சாவிதான் தடுப்பூசி” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments