இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து என்பது உறுதி

     செப்டம்பர் இறுதி வரை பள்ளி , கல்லூரிகள் திறக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து என்பது உறுதியாகியுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறும்.  ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கி  முதல் 3  மாதங்களுக்கு பாடங்கள் நடத்தி முடித்த பிறகு செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்துவது வழக்கம். ஆனால் மாணவர் சேர்க்கை பணிகள் இப்போது தான் நடைபெற்று வரக்கூடிய நிலையில், செப்டம்பர் இறுதி வரை பள்ளி , கல்லூரிகள் திறக்க தடை என அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் வகுப்புகளே துவங்காத நிலையில்,  செப்டம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய காலாண்டு தேர்வு இந்த முறை நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதே போல்  டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வும் நடைபெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

0 Comments