ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

    ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொள்ளை நோயான கொரோனா, அனைவரின் இயல்பு வாழ்கையையும் புரட்டி போட்டது. பல்கலைகழகம், கல்லூரி, பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்வதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

     கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. ஆனால் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு இறுதி தேர்வு ஆரம்பமாவதற்கு முன்பே கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது இதனால் எந்தாண்டும் இல்லாத வகையில் 10 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து கல்வியாளர்கள் மேல்மட்ட குழு ஆலோசனைப்படி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 

    அரசு தேர்வுகள் இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது . மேலும் மாணவர்கள் பதிவு செய்திருந்த அலைபேசியில் குறுந்தகவல் வாயிலாகவும், tnresults.nic.in மற்றும் dg1.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண்களில் ஏதேனும் குளறுபடி என்றால் மாணவர்கள் பயின்ற பள்ளியில் தலையாசிரியர் வாயிலாக 17ஆம் தேதி முதல் 25தேதி வரை விண்ணபிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments