முதல்வர் பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து தெரிவித்ததால் ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம்

     சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தை மையமாக கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் உள்ள ஆத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி அவதூறாக மீம்ஸ் பகிர்ந்துள்ளார்.



      இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி விசாரித்தார். இதையடுத்து அந்த ஆசிரியரும், குழுவை நிர்வகித்து வந்த (அட்மின்) பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக தூக்கியடிக்கப்பட்டனர்.





Post a Comment

0 Comments