12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்

    12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள். 12-ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வை எழுதாத மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்ய முடியும்? தேர்வு நடத்த அரசு தயார் நிலையில் உள்ளது. தேர்வு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளது. அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது தேர்வு எழுத உள்ளனர். தமிழக முதல்வர் மாணவர், பெற்றோர்களின் நலன் கருதி தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் ஆல்பாஸ் என்று அறிவித்துள்ளார்.

   தமிழகத்தில் மட்டும் தான் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாடும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments