பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு

        தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

   மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து குழு தரும் அறிக்கையை வைத்து முடிவெடுக்கப்படும் என்றார். 

  முன்னதாக, கரோனா எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகும் என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே ஒரு சில மணி நேரம் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் படிப்பதற்கு இணையவழி வகுப்புகள் உகந்த சூழலாக இருக்காது என அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments