தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பணிக்கு வரும் நாளும், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது

    பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பணிக்கு வரும் நாளும், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன், 15க்கு தள்ளி வைக்கப்பட்டதால், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தற்போது பள்ளிக்கு பணிக்கு வர வேண்டியதில்லை. பள்ளிக்கு வருவதற்கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்துக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும், வரும், 26ம் தேதி பள்ளிக்கு பணிக்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments