வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

     வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.01.2020 (செவ்வாய்) வரை நீட்டிப்பு BEO தேர்வுக்கான தேதி : பிப்ரவரி 15 (சனி) மற்றும் 16 (ஞாயிறு) என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 13 / 2019 , நாள் . 27 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ண ப்பிக்க இறுதி நாள் . 09 . 01 . 2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது .

    பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் , பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது . தற்போது விண்ணப்பங்களை 21 / 01 / 2020 அன்று மாலை 5 . 00 மணி வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது . மேலும் தேர்விற்கான உத்தேச தேதி 15 / 02 / 2020 மற்றும் 16 / 02 / 2020 என தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments