தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு

     தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலை தளங்களில் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேர்வுகளில் மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.


    தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வினாத்தாள்களை உடனடியாக மாற்றி வழங்குமாறு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார்.அதன் அடிப்படையில், திங்கள்கிழமை நடைபெறும் அரையாண்டுத் தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கு மாற்று வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாமக்கல் கல்வி அலுவலர் உஷா, நெல்லை முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.







Post a Comment

0 Comments